500 கோடி மோசடி : தம்பதி கைது

         டெல்லி உட்பட மொத்தம் 7 மாநிலங்களில் சுமார் 2 லட்சம் பேரிடம் 500 கோடி ரூபாயை மோசடி செய்ததாக நாக்பூரைச் சேர்ந்த ஒரு தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உலாஸ் பிரபாகர் கைரே என்கிற இளைஞரும் அவரது மனைவி ரக்சா உர்ஸ் என்பவரும் போலி விளம்பரம் மூலம் இவ்வாறு பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டெல்லி காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி, ராஜஸ்தான், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சிக்கிம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் போலி நிறுவனங்களை நடத்தி இவர்கள் பொதுமக்களிடம் ஏமாற்றி முதலீடுகளை பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.