தெலங்கானா மத்திய அமைச்சர் வயலார் ரவி


     தனித் தெலங்கானாப் பிரச்சனை குறித்து அப்பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.
      இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனித் தெலங்கானா விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அது எப்போது முடிவடையும் என்பதைத் தற்போது கூறமுடியாது என்றும் தெரிவித்தார்.
      ஜனவரி 28-ம் தேதிக்குள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஒருபோதும் உறுதியளிக்கவில்லை என்றும் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
      தனித் தெலங்கானா பிரச்சனை குறித்து ஆலோசிக்க ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் இருவரும் டெல்லிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.

                                                                      -ஹாட் ஸ்பாட் நரேஷ்