சர்ச்சையில் சிக்கிய சசிதரூர்

     டெல்லியில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மாணவி குறித்த முழு விவரங்களை வெளியிட வேண்டும் என மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
உயிரிழந்த மாணவியின் பெற்றோர் சம்மதத்துடன் அவரைப் பற்றிய தகவல்களை வெளியிடலாம் என்று சசிதரூர் தனது Twitter சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.
மேலும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கொண்டு வரப்படும் புதிய சட்டத்திற்கு அந்த மாணவியின் பெயரைச் சூட்டலாம் என்றும், இது அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை என்றும் சசிதரூர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த கருத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் , பாரதிய ஜனதா கட்சி மற்றும் பல்வேறு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.